இங்கே உள்ளீர்கள்:  கடவுள் யார்?
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

கடவுள் யார்?

மெய்யான இந்து மதத்தின் அருளாட்சித் தத்துவம்

(i) அருளுலகத்தைப் பொறுத்தவரை 'ஒரே கடவுள்' என்று சொல்வது மனிதனுடைய தவறான கற்பனை. இது மனிதனுடைய வியக்கத் தக்க வினோதமான ஆசை, அதிசயிக்கத் தக்க விருப்பம்.

(ii) கடவுள் என்பவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று நினைப்பதும்,Goddess நம்புவதும் மிகப் பெரிய தவறு. எந்த மொழியைச் சேர்ந்த மனிதன் கடவுளாகிறானோ அவனுக்கு அந்த மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. அவன் கடவுளாகவே இருந்தாலும் இதுதான் உண்மை.

(iii) மனிதர்கள் விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவர்கள் போலக் கற்பனையாகக் 'கடவுளால் எல்லாம் செய்ய முடியும், கடவுளுக்கு எல்லாம் தெரியும்' என்று கருதுவது மாபெரும் தவறு.

(iv) அண்டபேரண்டங்களிலிருந்து வந்திருக்கக் கூடிய வழிபடு நிலையினர்கள், அல்லது சித்தர்கள் கடவுளாக வணங்கப் பட்டாலும் சரி, அவரவருடைய ஏட்டறிவுக்கும், பட்டறிவுக்கும் ஏற்பத்தான் அவர்களுக்குச் செய்திகள் தெரிந்திருக்கும்; அவர்களால் எதையும் செய்ய முடியும். அதாவது மனிதர்களிடையே அறிவிலும், ஆற்றலிலும், மற்றச் செயல்பாடுகளிலும் எப்படி வேறுபாடுகள் நிறைய இருக்கின்றனவோ அது போலத்தான் கடவுள்களுக்கு இடையிலும் அறிவிலும், ஆற்றலிலும், செயல் திறமைகளிலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.

இந்தப் பேருண்மைகளின் அடிப்படையில்தான், பதினெண்சித்தர்கள் சித்தர் நெறியெனும் சீவநெறியான இந்து மதத்தைப் படைத்திருக்கிறார்கள். அதாவது எந்தத் தனிமனிதனாக இருந்தாலும் சரி,  குடும்பமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குழுவினராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களின் கோயில்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் அவர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லறத் தெய்வம், குடும்ப தெய்வம், உறவினர்கள் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், தெருவினர் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், ஊரார் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், குறிப்பிட்ட வட்டாரம் அல்லது நாடு முழுதும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம் என்று தெய்வங்களைப் பலவகை நிலைக்குரியவர்களாக வகுத்துப் பிரித்தமைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல மனிதர்கள் தங்கள் தங்களின் தாய்மொழியின் அடிப்படையில்தான் தங்களுடைய வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் தாங்கள் வழிபடக் கூடிய கடவுள்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், நாட்டின் எல்லைக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, சொந்த இடம் விட்டு நெடுந்தொலைவு சென்று வீர மரணத்தாலோ, மிகச் சிறந்த பத்தி, சத்தி, சித்தி, முத்திகளாலே கடவுளாக மாறியவர்கள் இருப்பார்களானால் அவரைச் சேர்ந்தவர்கள் நெடுந்தொலைவுள்ள இடத்திற்குச் சென்று பூசை செய்து அங்கிருந்து பிடிமண் எடுப்பார்கள். அதாவது, மூன்று கைப்பிடி மண் எடுத்து ஒரு துணியில் கட்டிப் புதிய ஓலைப் பெட்டியில் வைத்திருப்பார்கள். முறைப்படிப் புனிதக் கலயம்* தயாரித்து [*கலயம் = வழக்காற்றில் இதனைக் கலசம், கலயம் அல்லது கரகம் அல்லது கிரகம் தயாரித்தல் என்று சொல்லுவார்கள்] இரண்டையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஊர் வரை வாசனைப் பூவை வழி நெடுகப் போட்டுக் கொண்டு கடவுள் ஆனவர்களைத் தங்களுடைய ஊருக்கு அழைத்து வந்து நிலை நிறுத்திக் கோயிலைக் கட்டிக் கொள்வார்கள். பிறகு அந்த நெடுந்தொலைவிலுள்ள மூலக் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். இதன்படிதான், இந்து மதத்திலுள்ள எல்லாக் கடவுள்களும் மனிதர்களாக வாழ்ந்து கடவுள்களாக மாறியவர்களே.

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong image
மேலே உள்ள படம் பொய்யான, தவறான, ஏமாற்றான படமே! ஆதிசங்கரர் தன் வாழ்நாளில் வெள்ளாடை அணிந்தே நீள்முடியோடும் தாடி மீசையோடும்தான் 32 வயது வரை உலகறிய வாழ்ந்தார். குருபாரம்பரியம் இவரை "வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்" என்றே குறிக்கின்றது.
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |