இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > 11வது பீடாதிபதி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

11வது பீடாதிபதி

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்

தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் வருகின்றவர்கள் பெரிய கோயிலுக்குள் சென்று கருவறையிலுள்ள பெரியவுடையாரை வணங்கி வழிபட்டுச் செல்பவர்கள் பாதிப் பேருக்கு மேல் இருக்காது. ஆனால், கோயிலுக்குள் சுற்றி வரும்போது கோபுரத்தருகில் அருட்கேணிக் கரையில் எழுந்தருளியிருக்கும் சித்தர் கருவூறாரை எல்லோருமே வழிபட்டுச் செல்வார்கள். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்களும், அதன் அண்மை மாவட்டத்தில் உள்ளவர்களும் சித்தர் கருவூறார் அவர்களைத் தங்களுடைய குலதெய்வமாக நினைத்து வழிபடுகின்றார்கள்.

வாராவாரம் 'குரு வாரம்' என்று கூறப்படும் வியாழக் கிழமையில் சித்தர் கருவூறாரை நேரில் வந்து வழிபடுகின்றவர்களும் தங்கள் தங்கள் இல்லத்தில் இவரது திருவுருவப் படத்தை வைத்து 11th Peedam வழிபடுகின்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஏறத்தாழ எல்லோருமே இவரை ‘குரு’ என்றும் ‘குருசாமி’ என்றும், ‘குருநாதர்’ என்றும், ‘குருதேவர்’ என்றும் போற்றி வணங்கி வழிபடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படி, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் அவர்களுக்கு ஏராளமான பத்தர்களும் எண்ணற்ற திருச்சபைகளும், சங்கங்களும், வார வழிபாட்டு மன்றங்களும், திருவிழாக் கொண்டாடும் கழகங்களும், இவருடைய புகழ் பரப்பும் குழுக்களும் இருக்கின்றன.

ஆனால், பொதுவாகத் தமிழ் நாட்டிலே எதையும் வரலாற்றுப் போக்கில் அல்லது பின்னணியில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லையென்பதால் இம்மாபெரும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முன்வரவே இல்லை.


மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளத் தொடரவும்....
கீதை விளக்கம்:

இசையோடு கூறப்படும் தத்துவக் கருத்துக்களே கீதை எனப்படும். இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே. பாரத காலத்துக் கண்ணதேவன் ஒரு தமிழனே. கண்ணதேவன் பாரதப் போரின் போது தூய தமிழில் அருட்சினனுக்குக் கூறிய அறக்கருத்துக்களே இன்று சமசுக்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பகவத் கீதை என்று பாராட்டிச் சீராட்டிப் பலராலும் பயிலப் படுகின்றது. பாரத காலத்து இந்தியா முழுதும் தமிழே ஆட்சி மொழியாகவும், பேச்சு வழக்கு மொழியாகவும் இருந்தது.


« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானாச்சாரியார்கள்

பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]

 

பெரிய கோயில்

   "... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]

 

ஞானாச்சாரியார் வரலாறு

    "மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."   

[மேலும் படிக்க...]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |