இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > கேள்வி பதில்கள் > துறவறம் பயனற்றது
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

துறவறம் பயனற்றது

மனைவி மக்களைத் துறந்துதான் மாபெரும் சித்திகளைப் பெற முடியுமா? ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையா?

பதினெண் சித்தர்கள், மனித இனம் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் இளமுறியாக் கண்டத்தில் (The Lost Lemuria continent- குமரிக் கண்டம்) தங்களது தாய்மொழியான தமிழ்மொழியில் தங்களது மதமான இந்து மதத்தை வழங்கியே மனிதப் பண்புகளையும், நாகரிகங்களையும் வளர்த்தார்கள். அவர்களுடைய விந்துவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளும் தொடர்ந்து வாழ்ந்தும் கூடத் தமிழர்களே அவர்களின் தலைமையையும், துணையையும், வழிகாட்டலையும்... ஏற்றுப் போற்றவில்லை. அதனால்தான், இந்துமத வரலாறு, தத்துவம், இலக்கியம், கலை, ஒழுகலாறு, விதி, சட்டம், மரபு, சம்பிறதாயம், சாத்திறம், தோத்திறம் ... முதலிய அனைத்தும் குழப்பமடைந்தன.

பதினெண் சித்தர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாகப் படைத்துள்ள 'கடவுள்கள்' (48 வகையினர்) அனைவருமே மனைவியோடு பெண்ணின்பம் துய்த்து வாழும் இல்லறத்தார்களே. பிறகு எப்படி ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையாகும்?

மனைவி மக்களைத் துறக்கும் "துறவி" பற்றிய கருத்து ஆரியருடையதே. இது தவறு, பயனற்றது, 'துறவியாக இருப்பவன் குரு, ஆச்சாரி, பீடம், மடம், சன்னிதானம், ஆதினம், அமளிகை, திருவடி, இருக்கை, நாயகம் ... என்ற 48 அருட்பட்டப் பொறுப்புக்களில் எதையுமே ஏற்கும் தகுதியுடையவனல்ல. துறவி ஒரு பாவியே' என்ற குருபாரம்பரிய வாசகமே இங்கு பதிலாகத் தரப்படுகிறது.

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

 
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |