இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > ஓலை 51 முதல் 60 வரை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஓலை 51 முதல் 60 வரை

எந்த மானுடம் இந்த மானுடம்

 ஓலை: 51

போன தமிழின வாழ்வு மீளச் சிவாலயங்கள்
சத்திபீடங்கள் திருப்பதிகள் எழுப்பினார்
வானவரை விண்ணவரை அமரரை இருடியை
முனிவரை அருவுருவச் சித்தியாளரை எல்லாம் மானுடராக்கினார்
மோனமாய்க் கருவறை மேல் கோபுரம் அமைத்தே
அருளாட்சிக்கு அருளாளர்களைப் பயிராக்கினார்

ஓலை: 52

திருமுறைகள் திவ்விய பிரபந்தங்கள் குருவாசகங்கள் அருள்வாக்குகள்
எனப் பலவகைப் பத்தி இலக்கியங்கள் சேர்த்தார்
கருவறைக்கே கற்சிலைகள் ஐம்பொன் சிலைகள்
செப்புச் சிலைகள் மரப்பாவைகள் மண்பொம்மைகள் செய்தார்
உருவாக்கிய அடியான் அடியாள் அடியார்
கொண்டே முழுமையாக அனைத்தையும் உயிர்ப்பித்தார்

ஓலை: 53

கரூர் முடிகண்ட சோழபுரத்தே விருப்பப்படி ஆரிய
சந்திரகுல வாரிசைத் தோற்றுவித்தாரே
உருவான இளவரசன் முதலாம் விசயாலயனைக்
குலக்குடியில் கலைகளும் ஞானங்களும் பயிற்றி வளர்த்தாரே
அருவப்போர், உருவப்போர், அருவுருவப்போர்
எத்தனை யெத்தனையோ நித்தம் செய்தாரே

ஓலை: 54

அரியலூர்க் கோவிலூரில் பந்திக்குப் பந்தி
ஆயிரம் மண்குதிரை வீரர் சிலைசெய்தே மாயப்படையை உருவாக்கினாரே
மண்ணால் செய்த மாயப்படை வென்ற வரலாற்றை
சீரிய அவ்வரலாறும் தோற்கக் காவிரிக் கருவூறாரின்
மண்ணாலான மாயப்படை மாபெரும் போர் செய்தது.

ஓலை: 55

திருப்புறம்பயம் பள்ளி வல்லம் கொல்லம்
தெள்ளாறு வெள்ளாறு குடமூக்கு
கருப்பூர் கோவிலூர் வடுவூர் கோட்டைகள் பாட்டைகள்
எனச் சண்டைகள் போர்கள் நிகழ்ந்தன எங்கும்
விருப்புற்ற மக்களால் படை விரிந்தது வெற்றிகள்
குவிந்தன கோட்டங்கள் கோட்டைகள் எழுந்தன

ஓலை: 56

ஆரியர், மோரியர், நந்தர், களப்பிரர், பூரியர்
வீரியர், சூரியர், தத்தாரியர்... ஆட்சிகளெல்லாம் அகன்றன
புதியது செய்யப் புரியாது புலம்பல்வாதிகள்
இணக்கமில்லாச் செயலால் சமுதாய இயக்கம் கெட்டது நின்றது
விதியிது என்று விவேகமின்றித் தளர்ந்த
சுணக்க வாதிகளால் சமுதாய இயக்கம் தடைப்பட்டு நின்றது.

ஓலை: 57

முதலாம் விசயாலயன் பரகேசரி விசயாலயன்
முதலாம் ஆதித்தன் முதலாம் பராந்தகன்
கண்டராதித்தர், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன்
உத்தம சோழன் முதலாம் இராசராசன் என்று
ஒன்பது பேர் கோள்களாகப் பாரதநாடு முழுமையும்
அருட்பேரரசு கண்டு அருளாட்சி நிறுவினாரே.

ஓலை: 58

தன்னோடு ஆக்கம் பெற்ற அரசியல் மாற்றமே
ஏற்றதெனச் செயல்பட்டும் விளைவு வீணாணது கண்டு நொந்தார்
முன்னர் அமராவதி யாற்றுக் கருவூறார் சமுதாய மாற்றமே
தன்னோக்கு ஆக்கம்பெற ஏற்றுத் தோற்றதை நினைத்தார்
என்ன செய்தால் இந்த மானுடர் திருந்துவர்
எந்த மானுடர் இந்த மானுடர் என்று
தமிழரை எண்ணியே வருந்தினார்.

ஓலை: 59

சமுதாய மாற்றத்துக்குப் பின்னே நிகழும் அரசியல்
மாற்றமே பயனை நல்குமென அறிந்த அளவில்
நிலவறையில் நிறைந்தாரே
நிலவறை புகுந்த நீள் தவத்தோர் நினைவால் கடலெனப்
பொங்கிய கலகங்களைக் கருவூர்த் தேவரே அடங்கச் செய்தார்.

ஓலை: 60

தன் தந்தை முயற்சி முழுமை பெறப் பன்னிரு திருமுறை
அரங்கேற்றியதோடு பல்வகைச் சைவநெறிச்
சாத்திறங்கள் பிறப்பித்தார்
தந்தை போல் முயன்று தஞ்சை போல் புகழ்
விளங்கும் கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில் கட்டினார்
முந்தையோர் முயற்சிகளின் தொடர்ச்சியால்
மூலை முடுக்கெல்லாம் கோவில், ஆலயம்
கோட்டம், பீடம், மடமென்பன கட்டினார்.

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

சமுதாய மாற்றம்

  யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.

  எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.

 

தமிழின் தொன்மை

   ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.

  மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.

  அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.

 

பீடாதிபதிகள்

அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்

தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |