இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > ஓலை 41 முதல் 50 வரை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஓலை 41 முதல் 50 வரை

எந்த மானுடம் இந்த மானுடம்

 ஓலை: 41

கன்னித் தமிழர் உணர்வு கன்னியாகவே
இருப்பது கண்டு திருத்த நினைத்தார்
குருபாரம்பரியம் அரச பாரம்பரியம்
இலக்கிய பாரம்பரியம் உருவாக்கியே ஏட்டில் வளரவிட்டார்
கருவான அறிவியல்களை மெய்ஞ்ஞானங்களை ஏட்டில் எழுதினார்.

ஓலை: 42

திருவாய் மலர்ந்த தெய்வத் தமிழறிந்தார் கொண்டு ஏடுகள் தொகுத்தார் நாடுமுழுவதும்
சிறுபள்ளி, பெரும்பள்ளி, தவப்பள்ளி, குருகுலம்
எனப் பல்வகைக் கல்விச் சாலைகள் கண்டார்
வளர்ந்தோங்க கல்விவகை பெறவே
பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகம் கண்டார்

ஓலை: 43

வாழ்வியல் கலைகள் போர்க்கலைகள் ஆட்சிக்கலைகள்
அருட்கலைகள் ஆயகலைகளாக
எண்ணற்கரிய கலைகள் நுண்மையாய்
திண்மையாய் பயிற்றப்பட்டன
வான்செலவு, கடல்போக்கு, தேரோட்டம்
யானை குதிரையேற்றம் உலகோர் கற்கத் திரண்டனரே

ஓலை: 44

திருத்தம் பெற்ற மருத்துவம் தேர்ந்த மருந்துகளும்
விரைந்தே ஞால முழுதும் சென்றனர்
பொருத்தமாக தமிழர் வரலாறு பூத்தமலர்க்
காடாக வளர்க்கப்பட்டது.
இராமாயணம், பாரதம், கீதை, வாசிட்டம்,
புராணங்கள், காப்பியங்கள், அறநூல்கள்
வீராவேசங் கொண்டு கிளர்ந்து வளரலாயின விவேக மிகுதியோடு.

ஓலை: 45

தீராக் கலைப்பசியும் வேட்கையும் நெஞ்ச
வறட்சியும் சிந்தை மிரட்சியும்
ஆராத் துயருழந்து அகன்றோடின விலையான
நிறைவுகள் நிம்மதிகள் ஏராளமாயின
பாராண்ட பைந்தமிழர் பாரம்பரியப் பெருமையெல்லாம்
பரந்த வெளிப் பண்டங்களாயின.

ஓலை: 46

தாராளமாய்த் தமிழர் தன்னம்பிக்கை தன்மானம்
தழைத்தோங்கவே வழிகள் பிறந்தன
காரிருளில் கண்ணற்றவர் வாழ்வென விருந்த
கன்னித் தமிழர் வாழ்வும் மாறியது
பொருத்தமான விளக்கங்கள் வரலாறுகள்
பொருள் நூல்கள் மரபு நூல்கள்
திருத்தமான சமுதாய சமய அரசியல் மரபு நூல்கள்
இலக்கண இலக்கியங்கள்

ஓலை: 47

கருவாயிருந்து மறந்து இறந்த தென்றான
கலைகள் ஞானங்கள் எல்லாம் பிறக்கச் செய்தன
உருவான தலைவர்கள் கலைஞர்கள் தளபதிகள்
உருவாக்கியே அனைத்தும் ஞானப்பயிர் விளைத்தனர்
ஒருமை காணாச் சமயக் கணக்கர் சமுதாயப்
பிணக்கர் அரசியல் சுணக்கர்

ஓலை: 48

அருவாய் வளர்ந்த இணக்கமற்ற பிணக்குகளை
சுணக்குகளை வித்தகத் தத்துவத்தால்
கருவூறார் எருவாக்கத் தமிழர் தீரம், வீரம்
மறம் திறம் வளர்த்தாரே
இருநூற்றைம்பத் தாறாண்டுகள் இருள்
பகல் பாராது உழைத்தாரே இவர்.

ஓலை: 49

பட்டி தொட்டி குக்கிராமங்கள் கிராமங்கள்
சிற்றூர்கள் பேரூர்கள் நகரங்கள்
பட்டாளக் கொட்டடிகளாயின பைந்தமிழ் படை
திரண்டு பரணி பாடியே பார்முழுதும் உலா வந்தது
பண்டைய மூவேந்தர் ஆட்சி வலிவோடு
வாழ்வுற்றது வளர்ந்தது மீண்டும்

ஓலை: 50

எண்டிசையும் வென்றார் செந்தமிழர் மந்தைகளாய்
உழைக்க அடிமைகள் வந்தனரே
வண்டமிழகம் வந்தவரை வாழவைத்து
வாழ்வுபெற்றுத் தாழ்வகன்று அருட்பேரரசு பெற்றதே!
சோனகரம் சீனகரம் யவனகரம் அலைகடல்
நகரங்கள் தானாகத் தானமாக வந்தனவே
வானகரம் வையகமே யாமென வளர்ந்த
தஞ்சையில் பெரிய உடையார் விண்ணகரம் வளரலாயிற்று

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

சமுதாய மாற்றம்

  யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.

  எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.

 

தமிழின் தொன்மை

   ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.

  மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.

  அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.

 

பீடாதிபதிகள்

அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்

தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |