இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > ஓலை 11 முதல் 20 வரை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஓலை 11 முதல் 20 வரை

எந்த மானுடம் இந்த மானுடம்

 ஓலை: 11

மானுடர்க்கு இறவாமை பிறவாமை வழங்கியவர்களே இவர்கள்
மானுடரை கடவுளாக்கும் சமயநெறி கண்டவர்களே இவர்கள்
மானுடர் வழிபடுநிலைக்குரிய நாற்பத்தெட்டு வகை அருளாளரைக் கண்டவர்கள் இவர்கள்

ஓலை: 12

மானுடர் வழிபாடு நிகழ்த்த நூற்றுக்கு மேற்பட்ட வகையான நிலையங்களைக் கண்டவர்களே இவர்கள்
இட்டும் தொட்டும் சுட்டியும் ஞானம் வழங்குபவர்களே இவர்கள்
கோயில், நகரம், ஆலயம், திருப்பதி, கோட்டம், பாழி என தொண்ணூற்றாறும்
மட்டநிலை மானுடர் கெட்டநிலை விட்டொழிக்க
திட்டமிட்டுக் கட்டிய வழிபடு நிலையங்களே.

ஓலை: 13

பட்டப்பகல் பூசையில் விளையும் பத்தியே
வெட்டவெளித் தவமாகிக் கூட்டுவிக்குமே ஞானம்
பதினெண் சித்தர்களே பலவகைச் சித்தர்களைப் பயந்தளித்தனர்
பதினெண் சித்தர்களே பார் முழுவதும் சமயநெறியால்
தனிமனிதர், குடும்பம், சமுதாயம், அரசியலாவன வடித்தனர்.

ஓலை: 14

பதினெண் சித்தர்களே ஆகமம், மீமாம்சை, நிடதம், துணைநிடதம் ஈன்றனர்
பதினெண் சித்தர்களே செப்புமொழி செய்தனர்
பதினெண் சித்தர்களே கலைகள் ஞானங்கள் கண்டனர்
பதினெண் சித்தர்களே தத்துவங்கள் சித்துக்கள் ஈன்றனர்.

ஓலை: 15

பதினெண் சித்தர்களே ஊழ்வினை, விதிகள் வெல்ல வழியமைத்தனர்
பதினெண் சித்தர்களே இதிகாச புராணமென இலக்கியங்கள் தோற்றுவித்தனர்
பதினெண் சித்தர்களே அனாதியினர் ஆதியினர் பாதியினர் மீதியினர்.

ஓலை: 16

பதினெண் சித்தர்களே மறையோர், முறையோர், நெறியோர், வேதத்தோர்
பதினெண் சித்தர்களே ஐந்திறத்தார், ஐந்தரத்தார், ஐங்கரத்தார், ஐம்பூதத்தார்
பதினெண் சித்தர்களே சாத்திறத்தார், சாத்தரத்தார், தோத்திறத்தார், தோத்தரத்தார்

ஓலை: 17

பதினெண் சித்தர்களே அத்திறத்தார், அத்தரத்தார், சூத்திறத்தார், சூத்தரத்தார்
பதினெண் சித்தர்களே நிடதத்தார், துணைநிடதத்தார், ஆகமத்தார், மீமாம்சையார்
பதினெண் சித்தர்களே திருவாக்கார், திருவாசகத்தார், குருவாக்கார், குருவாசகத்தார்.

ஓலை: 18

பதினெண் சித்தர்களே அருள்வாக்கார், அருள்வாசகத்தார், மருள்வாக்கார், மருள்வாசகத்தார்
பதினெண் சித்தர்களே ஞானியர், தவத்தார், பூசையார், கல்வியார்.

ஓலை: 19

பதினெண் சித்தர்கள் திறமே சரித்திறம் வரலாறு
பதினெண் சித்தர்கள் அடைவே சாத்திறம் தோத்திறம்
பதினெண் சித்தர்கள் கொடையே இலக்கியம் கலை
பதினெண் சித்தர்கள் சாதனையே சமயம் அரசியல்
பதினெண் சித்தர்கள் விழியே வழியே பைந்தமிழ்.

ஓலை: 20

பதினெண் சித்தர்களும் பல்வகைச் சித்தர்களும்
எண்ணம்போல் செயல்படவே திட்டமிட்ட தலைமை பிறந்தது
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் காலங்காலங்களில் தோன்ற ஆணையும் பிறந்தது.
« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

சமுதாய மாற்றம்

  யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.

  எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.

 

தமிழின் தொன்மை

   ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.

  மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.

  அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.

 

பீடாதிபதிகள்

அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்

தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |