இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > 15வது ஆணை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

15வது ஆணை

பதினெண் சித்தர் பீடாதிபதியின பதினெட்டு அருளாட்சி ஆணைகள்

15 வது ஆணை;

இந்தப் பக்கத்தில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி மீதி ஆணைகளைப் படிக்கவும்.

கோயில் நிறுவன நிருவாகப் பொறுப்புக்கள் அனைத்தும் தமிழர்களால் மட்டும் நிகழ்த்தப்பட ஏற்பாடு செய்யவேண்டும்.

XV. அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களிலும், கருவறைகளிலும், வெட்டவெளிக் கருவறைகளிலும் ஊழியம் புரிகின்ற அனைத்து வகையான ஊழியக் காரர்களுக்கும் நிறைவான ஏட்டறிவும், பட்டறிவும் வழங்குவதற்குரிய பயிற்சிகள் கருகுலங்களின் மூலமும், குருகுலங்களின் மூலமும், தருகுலங்களின் மூலமும், திருகுலங்களின் மூலமும் வழங்கப் பட்டேயாக வேண்டும்! வழங்கப் பட்டேயாக வேண்டும்! வழங்கப் பட்டேயாக வேண்டும்!

இதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் அவசியம் நேரடிப் பார்வையில் அந்தந்த வட்டாரத்து மக்களால் நிகழுமாறு செய்ய வேண்டும். இதற்குரிய பணிகளையும் கோயில் நிறுவன நிர்வாகங்களையும் கவனிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் செயல்படக் கூடிய ஏழு கரையினர்களாக (கூட்டத்தினர்களாக) ஒவ்வொரு வட்டாரத்து மக்களையும் பிரித்திடல் வேண்டும். இந்தக் கரையாளர்கள்தான் அனைத்துப் பொறுப்புக்களையும் அக்கரையோடு கவனித்து எக்குறையும் வராமல் மெய்யான இந்துமதத்தைப் போற்றிப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும்.

இந்த நியதியைச் சட்டமாக்கிட வேண்டும். இதனையே நாட்டு நடப்பில் புதிய கட்டமைப்புக்களை உண்டாக்குவதற்குரிய திட்டங்களாகச் செயலாக்க வேண்டும். அதாவது ஆலய நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்காகவும் நேர்மையாகவும் மென்மையாகவும் திண்மையாகவும் அமைந்திட்டால்தான் சமுதாயத்தின் செயல்நிலைகளும் அரசியலின் இயக்க நிலைகளும் உய்வு பெறும், உயர்வு பெறும், வாய்மை பெறும், நன்மை தரும்.

இதனை உணர்ந்து தமிழின அருட்பேரரசு அனைத்துத் தலைமைகளையும், பொறுப்புக்களையும் தமிழர்களுக்கே தர வேண்டும். தமிழிலேயே நிகழ்த்த வேண்டும். இதனைச் செயலாக்கத் தயங்கும் அருட்பேரரசனை எதிர்த்துப் போரிட அனைவரும் தயாராக வேண்டும். இது அருளாணை.

இதனைச் செயலாக்குவதைப் பொறுத்துத்தான் வருங்காலத் தமிழர்களின் தன்னம்பிக்கையும், தன்மானமும், இனப்பற்றும், இன ஒற்றுமையும், மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் உரிமை பெற்றிடும்! பெருமை பெற்றிடும்! விழிப்பு மிக்க செழிப்புற்றிடும்!


« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |