இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அன்பு சேவுக - 3 > இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்தே!
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்தே!

[குருதேவர் அறிக்கை 19இலிருந்து]

 

அன்புச் சேவுக!

யாம், அன்னியர்களுக்கு மட்டும் புதியவனாக இல்லாமல்; நம் தாயகத்து மக்களுக்கும் புதியவனாகவே உள்ளோம். ஆனால், இந்த எமது சொந்தநிலை; நமது இயக்கத்துக்கும் தொடர்ந்து வந்து விடக்கூடாது என்பதால்தான்; இந்த ஆண்டு 1985-இல் டிசம்பர் 24, 25இல் மதுரை மாநகரில் மாநில மாநாடு கூட்ட முடிவு செய்துள்ளோம்.

நம்மிடம் அருளுலக ஐயங்களை அகற்றிக் கொள்ள வந்த ஆர்வலர் முதல், நமது அருட்பணியால் நலமடைந்தோர் வரை அனைவரையும் சித்தரடியான், சித்தரடியார், சித்தரடியாள் ...... என்று எண்ணற்று உருவாக்கி அருளுலக இளவரசர்களாக, அருட்படைத் தளபதிகளாக, அருட்சேனை வியூகநாயகங்களாக, அருட்படையின் மாவீரர்களாக நாடு முழுவதும் சென்று செயல்படச் செய்தும் ...... நம்மால் நன்மையடைந்தவர்கள் கூட நமக்குத் துணையாக வராத நிலையே உருவாகிவிட்டது. இது வருந்தத் தக்கதே.

உடனடியாக, நாம், நமது வரலாறு, தத்துவம், கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் ..... முதலியவைகளைப் படித்தவர் முதல் பாமரர் வரை புரிந்து கொள்ளுமளவுக்கு நமது பணிகளனைத்தும் நமது அச்சிட்ட அறிக்கைகளையும், அறிவிக்கைகளையும், குருதேவர் ஏடுகளையும் விற்பதில் முனைவதாக இருக்க வேண்டும், நண்ப!

நாத்திகர்கள், மதமறுப்பாளர்கள், பகுத்தறிவுவாதிகள் ........ நமது மதத்தின் செயல்நிலைகளையும், தத்துவங்களையும் அநாகரிகமானவை, காட்டுமிராண்டித்தனமானவை, ஆபாசமானவை .... என்று குறைகூறிக் குற்றம் சாட்டுகின்றார்கள். இதற்குப் பதில் கூறத் தெரியாமல் பலகாலமாக நமது மதவாதிகள் திகைத்துத் திக்குமுக்காடித் திணறித் தேங்கியுள்ளார்கள்.

இந்துமதம், அநாகரீகமாக வாழ்ந்த ஆதிமனிதனை வளப்படுத்த படைக்கப்பட்டதே ஆகும். மனிதன் ஆடை, அணிகலன், வாழிடம் ........ முதலிய வசதிகளில்தான் நாகரீகம் அடைந்தவனாக உள்ளானே தவிர, அவனது சிந்தையும், நெஞ்சும், உணர்வும், எண்ணமும், வேட்கையும் ........ காட்டுமிராண்டி நிலையிலேயேதான் இருக்கின்றன. எனவேதான், மனிதனின் அகப்பண்புகளைத் திருத்திச் செம்மைப்படுத்தும் மதமான இந்துமதத்தில் ஆரம்ப காலத்திலிருந்த பல நெறிமுறைகளும், விதிகளும், பழக்கவழக்கங்களும் தொடர்ந்து கையாளப்படுகின்றன. இந்துமதம் மிகமிகத் தொன்மையானது, பழமையானது ........ என்பதை விளக்குவதாகத்தான் இந்து மதத்தில் நடைமுறைகள் கருத்துக்கும், கண்ணோட்டத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகின்றன. இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்து போன்றவை. இவைதான், அருளை ஊற்றெடுக்கச் செய்கின்றன. அருளை அனுபவப் பொருளாக வழங்குகின்றன. இந்துமதம் மனிதர்களைத் தூய்மையும், வாய்மையும் .......... அடையச் செய்யும் பேராற்றலுடையவை!

---- இவ்வுண்மையை ஏற்று ஒவ்வொரு இந்துவும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் தனது இந்துமதத்தை வளவளர்ச்சியும், மறுமலர்ச்சியும் அடையப் பாடுபட முன்வர வேண்டும். இதற்கான வழிமுறைகளும், நடைமுறைகளும் தெளிவான திட்டங்களும் எம்மிடம் இருக்கின்றன.

வாருங்கள்! சிந்திப்போம்! செயல்படுவோம்!

 அன்பு

ஞாலகுரு சித்தர் கருவூறார்

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானத் தேடல்

".. எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல! ..."

"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."

 

அருளோ அருள்

  "...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |