இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அன்பு சேவுக - 1 > அருளாட்சித் திட்டம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

அருளாட்சித் திட்டம்

[குருதேவர் அறிக்கை 2இலிருந்து எடுக்கப் பட்டது.]

அன்புள்ள சேவுக!

'..... எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும்,

  • கருவறைக்கு மேல் பொற்கலயம் வைக்கவும்;
  • தாமரையும் அல்லியும் [பகலிரவு மலர்ந்த மலர் உள்ள தடாகமாக இருந்திடும்] நிறைந்த பளிங்கு போல் தெளிந்த நீருடைய பொய்கை எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;
  • கொடிய பலநோய்களைப் போக்கும் மூலிகைகளும் நறுமணமிக்க மலர்களும் பசுமை மாறாமல் வளரும் நந்தவனம் எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;
  • எல்லாக் கோயில்களிலும் ஆறுகாலப் பூசையின்போதும் புலமைமிக்க அருட்செல்வர்கள் உயிரும் உடலும் நலமுறும் சித்தாந்தக் கருத்துரைகளை அருள்வாக்காகச் சொற்பொழிவாற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்திடவும்;
  • எல்லாக் கோயில்களிலும் எல்லாத் திருவிழாக்களும் முறைப்படி இனிதே நிறைவேறிடவும்;
  • உலகெங்கும் சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்புதற்குரிய அறிவும், புலமையும், பயிற்சியும் பெற்ற தொண்டர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி எல்லாக் கோயில்களிலும் முறையாக நடந்திடவும்;
  • எல்லாக் கோயில்களும் பல்கலைக் கழகமாக, திருமண மண்டபமாக, மனமகிழ் மன்றமாக, கலைவளர் கூடமாக, மருத்துவமனையாக, உயிரின் நலம் பேணும் தெய்வீகக் கலைகளைத் தவத்திலாழ்ந்து பயிலும் தவப் பள்ளியாக --- ஆக்கிடுதற்கும்

உரிய தெளிவான, முறையான, முழுமையான திட்டங்கள் அனைத்தும் தீட்டி முடிக்கப்பட்டுவிட்டன ..... '

 

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானத் தேடல்

".. எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல! ..."

"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."

 

அருளோ அருள்

  "...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |