இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > ஜகத்குரு?! லோககுரு?!
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஜகத்குரு?! லோககுரு?!

உலககுரு சகடகுரு

உலக குரு, சகட குரு என்று பதினெண் சித்தர்களால் குறிக்கப்படும் சொற்கள் சமசுக்கிருதத்தில் லோககுரு, ஜகத்குரு என்று இன்றைய காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்களால் குறிக்கப்படுகின்றன.

உலக குரு விளக்கம்:

உலகம் = இம்மண்ணுலகைக் குறிக்கிறது.

உலக + குரு --> லோக குரு

இம்மண்ணுலகப் பயிரின உயிரினங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து அநுபவிக்க வழிகாட்டியாக இருப்பவர்.

மண், பெண், பொன் ... அனைத்தையும் ஏற்று அநுபவிப்பவரே.

சகட குரு விளக்கம்:

சகடம் = இயங்கிக் கொண்டே இருக்கும் இம்மண்ணுலகமும் மானுட வாழ்வையும் குறிக்கும்.

இம்மனித வாழ்வைத் தாங்கிச் செல்லும் வண்டி போன்று இருப்பவரைக் குறிக்கும்.

சகட + குரு --> சகத்குரு.

இப்பொருளிலேயே பதினெண்சித்தர்கள் ஆதிசிவாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார், ஆதிசங்கராச்சாரியார், ஆதிஈசுவராச்சாரியார் எனும் நான்கு ஆச்சாரியார்களுக்கு மட்டுமே உலககுரு, சகத்குரு என்ற பட்டங்களை வழங்கியுள்ளனர்.

இதைப் புரிந்து கொள்ளாமல் பிறாமணர்கள் தங்களின் கற்பனையான துறவுக் கோலக் காலடி ஆதிசங்கராச்சாரியாரைப் பின்பற்றித் தோற்றுவித்துக் கொண்ட ஆச்சாரியார்களுக்கும் உலககுரு --> லோககுரு, சகட குரு --> சகத்குரு = ஜகத்குரு என்று சமசுக்கிருத மொழி ஒலிக்கேற்ற ‘லோககுரு’, ‘ஜகத்குரு’ என்ற சொற்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

குறிப்பு:-

  •     உலககுரு, சகடகுரு என்பவர்கள் பெயரளவிலாவது திருமணம் செய்திருக்க வேண்டும்.
  •     கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாவது; அருவுருவ நிலையிலாவது பெண்ணின்பம் துய்த்திருக்க வேண்டும்.
  •     ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளைச் செய்ய வேண்டும்.
  •     மோக, போக, வேக, தாக நுட்பங்களை உணர்ந்திருக்க வேண்டும்.
  •     காம சாத்திற, சாத்திர, சாத்தர, சூத்திற, சூத்திர, சூத்தரங்களில் தேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், துறவியாக, பிரம்மச்சாரியாக வாழும் இன்றைய சங்கராச்சாரியார்கள் தங்களை லோககுரு (உலககுரு), ஜகத்குரு (சகட குரு) என்று குறிப்பது தவறே! கேலிக் கூத்தே!

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஆதிசங்கரர் குலம்

சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழிவந்த சிவாச்சாரியாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே. ஆதிசங்கரர் தோன்றிய அதே கருணீக்க சைவ வேளாளர் மரபில், சிவபூசையில் தேறிய சிவாச்சாரியார் குடும்பத்தில் தோன்றிய வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்கொடை வள்ளல், அருட்பா வழங்கிய பேரருளாளர், ஞானசித்தர் இராமலிங்க அடிகளார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

காஞ்சி மடம்

ஆதிசங்கரர் இந்தியாவில் நான்கு மடங்களே நிறுவினார் என்பது வரலாறு. இன்றும் கூட, இந்தியாவில் உள்ள (பூரி, காலடி, காசி...) நான்கு சங்கராச்சாரியார்களும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஏற்பதே இல்லை. தங்களில் ஒருவராகக் கருதுவதுமில்லை.

கும்பகோணத்தில் தோன்றிய சங்கர மடச் சத்திரத்தின் தொடர்புடைய 300 ஆண்டு வரலாறு கொண்டதே இன்றைய காஞ்சி சங்கரர் மடம். ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு இல்லை. ஆதாரங்கள் உள்ளன.

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |