இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அருள் வாக்கும் இந்து மதமும்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

அருள் வாக்கும் இந்து மதமும்

ஞானாச்சாரியார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் 'நிலவறையின் வாயிலிலே' என்ற தலைப்பிட்ட குரு பாரம்பரிய வாசகங்களில் 'அருள் வாக்கும் இந்து மதமும்' என்ற தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார். அதில் ஒரு சில துளிகள்.

"மனித வாழ்க்கை என்பது முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனாய் உருவாகிட்ட ஊழ்வினை என்னும் சத்தியின் வலிமையான திட்டங்களின் படிதான் அமையும். இந்தத் திட்டங்களுக்கிடையில் மனிதனை இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள், ஏக்க ஏமாற்றங்கள், நோய் நொடிகள், இழிவழிவுகள்.... எனும் பல நிலைகளுக்கு ஊடே அலைந்து திரியும்படிச் செய்வது விதியென்ற ஒரு சத்தியே ஆகும். இந்த விதியும் ஏழு நாள்கள், ஒன்பது கோள்கள், 12 இராசிகள், 27 விண்மீன்கள் என்பனவற்றை அங்கங்களாக அல்லது ஏற்புச் சத்திகளாகக் கொண்டு இயங்குவனவே ஆகும்."

 
"மனிதர்கள் தங்களின் வாழ்வின் நல்லவை, அல்லவை, இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நோய்நிலை, பேய்நிலை,... முதலியவைகளின் ஆட்சிக்குரிய காரணங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் ஊழ்வினையும், விதியும் வலிமையாக அமைந்திருக்கின்றன."
"இவையிரண்டோடு அல்லாமல் தீயவை செய்யும் மந்திரவாதி என்ற ஒரு மூன்றாவது சத்தியும் மனிதர்களுக்கு புரியாமை நிலையில் தொல்லைகளை வளர்க்கிறது.

"எனவேதான், இந்த மந்திர வாதியையும், ஊழ்வினை, விதி முதலியவைகளையும் முறையாக வென்று நிறை வாழ்வு வாழுமாறு மனிதர்களுக்கு உதவுவதற்காகவே ஞானாச்சாரியார்கள் தங்களுடைய வாழ்நாளின் ஒரு பகுதியை 'அருள்வாக்கு வழங்கல்' எனும் அருட்பணியில் செலவழிக்கிறார்கள்.

"அதாவது, பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு மனிதனும் பெற்றிட வேண்டும் என்பதற்காகவே மனித வாழ்வில் குருவின் துணையோ அல்லது திருவின் அருளோ கிடைப்பதற்குரிய வழிவகைகளை அருள் வாக்கின் மூலம் ஞானாச்சாரியார்கள் நேரடியாகவோ அல்லது தாங்கள் உருவாக்கிய அடியான், அடியாள், அடியார் மூலம் எல்லா பொதுமக்களுக்கும் வழங்குகிறார்கள்.

"ஆனால் எல்லா பொதுமக்களுமே தானென்ற வம்பு, வீம்பு, அகம்பாவம், ஆணவம் எனும் நான்கினாலும் அலைக்கழிக்கப்பட்டு வீணாகி விடுகிறார்கள். கோடியில் ஒருவர் இருவர் இந்தப் பாதிப்புக்களுக்குத் தப்பிப் பிழைத்துக் குருவின் அருளையோ, திருவின் அருளையோ பெற்றிட்டாலும், பேராசை, அதிகார வெறி, போட்டி, பொறாமை எனும் நான்கு வகைப்பட்ட மாயைகளால் தங்களுக்குக் கிடைத்திடும் குருவின் அருளையும், திருவின் துணையையும், அற்ப சொற்ப உலகியலில் வீணாக்கியே விடுகிறார்கள்.

"எனவேதான் நான்கு யுகங்களாகியும் இம்மண்ணுலகின் சாதாரண மானுட இயல்புகளைக் கடந்து அறிவார்ந்த வாழ்க்கை, அன்பார்ந்த வாழ்க்கை அருளார்ந்த வாழ்க்கை, அனைத்தும் கடந்த பேரருள் வாழ்க்கை எனும் நான்கு வகைப்பட்ட வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் விரல் விட்டு எண்ணிடக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் இந்தச் சிலரில் பலர் உலகியலுக்குத் தெரியாமலே போய் விடுகிறார்கள்.

"எனவேதான் அருளுலக மூலவர்களாகவும், காவலர்களாகவும் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஞானாச்சாரியாராகவும், தமிழினத்துக் குருபீடமாகவும், தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபையின் தலைவராகவும் தோன்றிடும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளே இந்துமதத் தந்தையாக இருந்து இந்து மதத்தைக் காக்க எல்லா ஏற்பாடுகளையும் தங்கள் காலத்திலேயே செய்கிறார்கள். அதாவது ஞானாச்சாரியார்களே இந்துமத மறுமலர்ச்சிக்காக, வளவளர்ச்சிக்காக, ஆட்சி மீட்சிக்காக, விழிச்சி எழிச்சி எப்போதும் காக்கும் செழிச்சிக்காக அருள்வாக்குக் கூறும் பணியில் தாங்களே ஈடுபட்டிடுகிறார்கள்.

"எனவேதான் அருள்வாக்கும் இந்துமதமும் உயிரும் உடலுமாக இருக்கின்றன. இந்தப் பெரிய அரிய சீரிய பிணைப்பையும், இணைப்பையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் சிலராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளான ஞானாச்சாரியாரின் காலத்திலே தோன்றிடுகிறார்கள்.

"எம் காலத்தில் தோன்றியவர்கள் நிலவறையின் வாயிலுக்குக் கூட வர முடியாமல் தொலைவில் நிற்கிறார்கள் ....."


இந்தக் குருபாரம்பரிய வாசகம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகங்களில் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது.

 


 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானாச்சாரியார்கள்

பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]

 

பெரிய கோயில்

   "... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]

 

ஞானாச்சாரியார் வரலாறு

    "மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."   

[மேலும் படிக்க...]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |